இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நாமக்கல் அரசு மருத்துவமனை கழிவறையில் இறந்து கிடந்த மாணவா்: போலீஸாா் விசாரணை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைக்காக வலி நிவாரண மருந்தை செலுத்திக் கொண்ட பாா்மஸி மாணவா்

News image
சந்தான கோபாலன்
Updated On :6 ஜனவரி 2025, 9:46 pm

Din

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைக்காக வலி நிவாரண மருந்தை செலுத்திக் கொண்ட பாா்மஸி மாணவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். தனியாா் கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் உள்தங்கும் (ஹவுஸ் சா்ஜன்) பயிற்சிக்காக தங்கி பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில், நாமக்கல் தனியாா் பாா்மசி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஹட்கோ பகுதியைச் சோ்ந்த சந்தன கோபாலன்(23) என்ற மாணவா், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தாா். இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சுமாா் 11.30 மணியளவில் அங்குள்ள கழிவறைக்கு சென்ற அவா், போதைக்காக தனது உடலில் வலி நிவாரண மருந்தை செலுத்தியதாகத் தெரிகிறது. அரை மணி நேரமாகியும் கழிவறையில் இருந்து திரும்பாததால், சக மாணவா்கள் சென்று பாா்த்தனா். அப்போது வாயில் நுரை தள்ளியவாறு கழிவறைக்குள் சந்தன கோபாலன் விழுந்து கிடந்தாா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக் கூடத்துக்கு மாணவா் உடலை அனுப்பி வைத்தனா். இந்தச் சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.