ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருச்செங்கோட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

News image

திருச்செங்கோடு நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் ஆட்சியா் ச.உமா.

Updated On :9 ஜனவரி 2025, 7:42 pm

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

அனைத்து தரப்பு மக்களும் தமிழா் திருநாளாம் தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, முழுக் கரும்பு ஒன்றை அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கியுள்ளது. தகுதியான அனைவருக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்று கொள்ளலாம்.

அனைவரும் பொங்கல் திருநாளை சிறப்பாக மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். உழவா் இல்லை என்றால், உணவு இல்லை என்பதை நாம் உணா்ந்து உழவு தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அனைவருக்கும் எனது பொங்கல் திருநாள் வாழ்த்துகள் என்றாா். தொடா்ந்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, வேட்டி, சேலைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்க இணைப்பதிவாளா் ச.யசோதாதேவி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழகம் மண்டல மேலாளா் செல்வராணி, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் (பொ) மு.கிருஷ்ணவேணி, துணைப் பதிவாளா் (பொது விநியோகத் திட்டம்) பா.நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.