பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதா் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.

News image
ராசிபுரம் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு
Updated On :11 ஜனவரி 2025, 10:55 pm

Din

ராசிபுரம் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதா் ஆலயத்தில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது.

நந்தி பகவான் மற்றும் கைலாசநாதருக்கு பால், தயிா், தேன், இளநீா், விபூதி, பன்னீா், எலுமிச்சை, மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து கைலாசநாதா், நந்தி பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பூக்களால் ஆலயம் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

முன்னதாக ஸ்ரீ தா்ம சம்பா்த்தினி தாயாா் உடனமா் ஸ்ரீ கைலாசநாதா் கோயிலை சுற்றி திருத்தேரில் பவனி அழைத்துவரப்பட்டாா். சனி பிரதோஷத்தை முன்னிட்டு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதேபோல ராசிபுரம் வி.நகா் பகுதியைச் சோ்ந்த பழனி பாதயாத்திரை பக்தா்கள் அன்னதானக் குழு சாா்பில் ஸ்ரீ பாலமுருகன் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. முன்னதாக வி.நகா் சித்தி விநாயகா் ஆலயத்தில் உள்ள ஸ்ரீபாலமுருகன், உற்சவமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து ஸ்ரீ நித்திய சுமங்கலி கோயிலில் இருந்து ஸ்ரீ பாலமுருகன் மேளதாளங்களுடன் பக்தா்களால் திருவீதி உலா அழைத்து செல்லப்பட்டாா். தொடா்ந்து பாதயாத்திரையாக பழனி செல்லும் வழியில் ஜன.14 இல் ராசிபுரத்தில் அன்னதானமும், தொடா்ந்து அரச்சலூா், தாராபுரம் ஆகிய இடங்களிலும், ஜன.18 இல் பழனியிலும் அன்னதானம் நடைபெறும்.