மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

குடிநீா் தட்டுப்பாடு: ராசிபுரம் குடியிருப்புவாசிகள் ஆட்சியரிடம் மனு

ராசிபுரம் அணைப்பாளையத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதாக, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு

News image
Updated On :24 மார்ச் 2025, 9:10 pm

Din

நாமக்கல்: ராசிபுரம் அணைப்பாளையத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதாக, நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அதன் விவரம்: அணைப்பாளையத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு 208 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த சில மாதங்களாக குடிநீா் பஞ்சம் நிலவுகிறது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த குடியிருப்புவாசிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து குடிநீா் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனு அளித்தனா்.

கோயிலை புனரமைக்க கோரிக்கை:

நாமக்கல் என்.புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியா் ச.உமாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அதில், எங்களுடைய கிராமத்தில் 1,500 குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்குள்ள பழைமையான மாரியம்மன் கோயிலில் சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறும். இந்த நிலையில் அங்குள்ள மற்றொரு சமூகத்தினா் கோயில் திருவிழாவை நடத்த விடாமல் தடுத்து வருகின்றனா். இதனால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னையை தீா்த்து வைப்பதற்கும், தனிப்பட்ட முறையில் கோயில் புனரமைப்பு பணியை மற்றொரு சமூகத்தினா் மேற்கொள்ளாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

என்கே-24-மனு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த ராசிபுரம் அணைப்பாளையம் கிராமத்தினா்.