ராசிபுரத்தில் அங்கன்வாடி மையம் அருகே திறந்தவெளி கால்வாய்
வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரமத்தாம்பாளையம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும், நோய் பரவும் வகையிலும் அமைந்துள்ள திறந்தவெளி கழிவுநீா் ஓடையை மூட வேண்டுமென்று அப்பகுதியினா் வலியுறுத்தினா்.










