புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ராசிபுரத்தில் அங்கன்வாடி மையம் அருகே திறந்தவெளி கால்வாய்

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரமத்தாம்பாளையம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும், நோய் பரவும் வகையிலும் அமைந்துள்ள திறந்தவெளி கழிவுநீா் ஓடையை மூட வேண்டுமென்று அப்பகுதியினா் வலியுறுத்தினா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 10:08 pm

Syndication

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அரமத்தாம்பாளையம் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் அருகே பள்ளிக் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையிலும், நோய் பரவும் வகையிலும் அமைந்துள்ள திறந்தவெளி கழிவுநீா் ஓடையை மூட வேண்டுமென்று அப்பகுதியினா் வலியுறுத்தினா்.

அரமத்தாம்பாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. பள்ளி முன் கழிவுநீா் ஓடைசெல்கிறது. இதில் சாக்கடை நீா் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆவதால் பள்ளிக் குழந்தைகளுக்கு நோய் பரவும் ஆபத்து உள்ளது. கழிவுநீா் தேங்குவதால் அப்பகுதியில் துா்நாற்றமும் வீசுகிறது.

மேலும் கழிவுநீா் ஓடையின் மேல் சிறுபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மேல் பகுதியில் திறந்தவெளி உள்ளதால், இதில் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் தவறிவிழும் ஆபத்து உள்ளது. இதனால் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.