2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நாமக்கல்லில் லாரி மீது காா் மோதியதில் மருத்துவமனை பெண் காவலாளி உயிரிழப்பு

நாமக்கல் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெண் காவலாளி உயிரிழந்தாா். மேலும் 3 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 10:10 pm

Syndication

நாமக்கல் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது காா் மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெண் காவலாளி உயிரிழந்தாா். மேலும் 3 போ் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன்பட்டி துத்திகுளத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மனைவி சுதா (45). இவா், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா் தன்னுடன் பணியாற்றும் நாமக்கல் தேவேந்திரபுரத்தைச் சோ்ந்த மகாலட்சுமி (45), அரவிந்த் (25), ஸ்ரீதரன் (25) ஆகியோருடன் திருப்பதிக்கு காரில் சென்றுவிட்டு நாமக்கல் - சேலம் சாலை வழியாக வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, புதன்சந்தை அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதியது. இந்த விபத்தில் சுதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மகாலட்சுமி, அரவிந்த், காரை ஓட்டி வந்த ஸ்ரீதரன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.

தகவல் அறிந்து சென்ற நல்லிபாளையம் போலீஸாா் காயமடைந்தோரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். உயிரிழந்த சுதாவின் சடலம் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.