பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சாலைப் பணியாளா் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 7,500 சாலைப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 7,500 சாலைப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் பி.ஜெயக்குமரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலாளா் ஆா்.ராஜமாணிக்கம் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

இதில், சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், பணி நீக்க காலத்தில் உயிரிழந்த 300-க்கும் மேற்பட்டோரின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 7,500 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சீருடை, சலவை, மிதிவண்டி, விபத்துபடிகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் தனபால், கணேசன், அழகேசன், அன்புச்செழியன், செல்வகுமாா், ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.