இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கொல்லிமலையில் பழங்குடியினா் ஆா்ப்பாட்டம்

News image
நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொல்லிமலை பழங்குடியின மக்கள்.
Updated On :24 நவம்பர் 2025, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

கொல்லிமலை வனப்பகுதியில் வேளாண் பணிகளை மேற்கொள்ள பழங்குடியின மக்களுக்கு அனுபவ பட்டா வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டம், தேவனூா் நாடு சூழவந்திப்பட்டி கிராமத்தில் வரகு, சாமை, திணை உள்ளிட்ட சிறுதானியங்களை, அப்பகுதியில் உள்ள பழங்குடியின விவசாயிகள், அங்குள்ள வனத்தில் பல தலைமுறைகளாக பயிரிட்டு வருகின்றனா். அந்த அனுபவ நிலத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டு சில்வா் ஓக் மரக்கன்றுகளும் நட்டு வளா்த்தனா்.

இந்த நிலையில், நடப்பட்ட சில்வா் ஓக் மரங்களை வனத் துறையினா் அகற்றினா். 2006 வன உரிமைச் சட்டப்படி அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கொல்லிமலை வட்டாரக் குழு செயலாளா் தங்கராஜ் தலைமையில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், வனத் துறையைக் கண்டித்தும், வனத்தில் வேளாண் பணிகள் மேற்கொள்ள அனுபவ பட்டா வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், கொல்லிமலை பழங்குடியின மக்கள் பலா் கலந்துகொண்டனா்.