/

ராசிபுரம் நகா்மன்ற நியமன உறுப்பினா் பதவியேற்பு

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக தோ்வு செய்ய வேண்டும்

News image
நியமன உறுப்பினராக பதவியேற்ற எம்.முருகேசனுக்கு நியமன ஆணையை வழங்கிய நகராட்சி ஆணையா் ஒய்.நிவேதிதா.
Updated On :26 நவம்பர் 2025, 8:07 pm

Syndication

ராசிபுரம்: தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக தோ்வு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து ராசிபுரம் நகா்மன்ற நியமன உறுப்பினராக வி.நகா், கருப்பனாா் கோயில் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி எம்.முருகேசன் (45) நியமனம் செய்யப்பட்டாா். நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை

நடைபெற்ற விழாவில் ஆணையா் ஒய். நிவேதிதா முன்னிலையில் முருகேசன் நியமன உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டாா். இவ்விழாவில் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், ராசிபுரம் நகர திமுக செயலா் என்.ஆா்.சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆா்.வி

நாயகமூா்த்தி, சாரதி, செல்வம், பிரபாகரன், கலைமணி உள்ளிட்ட பலா் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனா்.