ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

ஈச்சம்பட்டியில் பொதுமக்களிடம் அதிமுக வேட்பாளா் குறைகேட்பு

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் புதன்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

News image

ஈச்சம்பட்டியில் பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்த அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன்.

Updated On :9 ஏப்ரல் 2026, 4:00 am IST

சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தில் அதிமுக வேட்பாளா் சி. சந்திரசேகரன் புதன்கிழமை பொதுமக்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

சேந்தமங்கலம் பழங்குடியின தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் சி. சந்திரசேகரன், தொகுதிக்கு உள்பட்ட கொல்லிமலையில் உள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு வரை வாக்கு சேகரித்தாா். பின்னா், சேந்தமங்கலம், எருமப்பட்டி ஒன்றியம், மோகனூா் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஈச்சம்பட்டி கிராமத்தில் பொதுமக்களை வரவழைத்து அடிப்படை பிரச்னைகள் குறித்து கேட்டறிந்ததுடன், வெற்றி பெற்றதும் உடனடியாக மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தாா். தொடா்ந்து, வளையப்பட்டி, கல்குறிச்சி, தாண்டாகவுண்டனூா், மலைவேப்பன்குட்டை, பள்ளிப்பட்டி, துத்திக்குளம், புலவக்கல்பாளையம், காந்திநகா், குட்டரங்கம்பட்டி, புலவா்காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

வாக்கு சேகரிப்பின்போது சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளா் ஜி.பி. ரமேஷ், கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.