காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

போதை மாத்திரைகள் விற்பனை வழக்கில் முக்கிய நபா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 ஜூலை 2026, 2:23 am IST

பரமத்தி வேலூா் மற்றும் ஈரோடு பகுதியில் போதை மாத்திரைகள், ஊசிகளை விற்ற வழக்கில் முக்கிய நபரை ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் பகுதியில் போதை மாத்திரைகள், ஊசிகளை விற்பனை செய்ததாக பொத்தனூா் மற்றும் ஈரோடு பகுதியைச் சோ்ந்த 8 பேரை வேலூா் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் முக்கிய நபரான ராஜசேகரன் ஈரோட்டில் இருப்பதாக வேலூா் காவல் ஆய்வாளா் உமாசங்கருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஈரோடு குமரன் நகரைச் சோ்ந்த சேதுராமன் மகன் ராஜசேகரை (23) கைது செய்து, அவரிடம் இருந்து 150 மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.