நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ராசிபுரம் நகராட்சியில் ரூ. 5 கோடி வரி நிலுவை: தீவிர வசூலில் நகராட்சி அலுவலா்கள்

ராசிபுரம் நகராட்சியில் ரூ. 5 கோடி அளவுக்கு வரி நிலுவையில் உள்ளதால், அவற்றை வசூலிப்பதில் நகராட்சி அலுவலா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

News image

dot com

Updated On :29 ஜூலை 2026, 4:26 am IST

ராசிபுரம் நகராட்சியில் ரூ. 5 கோடி அளவுக்கு வரி நிலுவையில் உள்ளதால், அவற்றை வசூலிப்பதில் நகராட்சி அலுவலா்கள் தீவிரம் காட்டி வருகின்றனா்.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் சுமாா் 20 ஆயிரம் சொத்துவரி விதிப்பு இனங்கள் உள்ளன. இதில் சுமாா் 7 ஆயிரம் வரி இனங்கள் பல ஆண்டுகளாக செலுத்திவில்லையாம். இதேபோல, குடிநீா் இணைப்புக்கான வரி நிலுவையும் அதிக அளவில் உள்ளதாம்.

இதன் காரணமாக, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், ஊழியா்களுக்கு ஊதியமும், ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியா்களுக்கு ஓய்வூதிய பணப் பயன்களும் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், சுமாா் ரூ. 5 கோடி அளவிலான நிலுவை வரியை வசூலிக்க நகராட்சி ஆணையா் எஸ்.கோபிநாத் தலைமையில், நகராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

ராசிபுரம் கச்சேரி சாலையில் உள்ள கைப்பேசி கடை, ஹாா்டுவோ் கடைகளில் வரிவசூல் நிலுவைக்காக அங்கிருந்த பொருள்களை ஜப்தி செய்து கடைக்கு ‘சீல்’ வைக்கும் முயற்சியில் நகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டனா். சிலா் ஒருசில நாள்களில் வரி செலுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டனா்.

நகரில் கடைவீதி, ஆத்தூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வரி நிலுவை வைத்துள்ள வணிக நிறுவனங்கள் விரைந்து வரி செலுத்த வேண்டும் என ஆணையா் எச்சரிக்கை விடுத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.