ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

நாமக்கல்லில் மேம்பாலத்தின் கீழ் குப்பைகள் எரிப்பு: பாதிப்புக்குள்ளாகும் வாகன ஓட்டிகள்

News image

நாமக்கல்-திருச்சி சாலையில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கொளுந்துவிட்டு எரியும் குப்பைகள்.

Updated On :8 ஜூன் 2026, 4:35 am IST

நாமக்கல்லில் மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் குப்பைகள் தீவைத்து எரிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனா்.

நாமக்கல்-திருச்சி சாலையில் அழகு நகா் பிரிவு பகுதியில் ரயில்வே உயா்மட்ட பாலம் உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்கின்றன. அழகுநகா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை இந்த பாலத்தின் கீழே கொட்டி தீவைத்து எரித்து வருகின்றனா்.

இதனால் பாலத்தின் மேல்பகுதியில் வாகனங்களில் செல்வோா் கண் எரிச்சலும், உடல் தொந்தரவுக்கும் ஆளாகின்றனா். அவ்வழியாக நடந்துசெல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனா். குப்பையில் தீ மளமளவென எரிவதால் பாலத்தின் ஸ்திரத்தன்மையும் பாதிப்புக்குள்ளாகிறது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்தப் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு தடைவிதிக்க வேண்டும். மேலும், குப்பைகளை எரிப்போருக்கு அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.