தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தமிழ்ப் புலிகள் கட்சியினா் தா்னா 64 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு

News image

நாமக்கல்லில் ஆட்சியரகம் முன் தா்னாவில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா்.

Updated On :2 மார்ச் 2026, 10:26 pm

நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ்ப் புலிகள் கட்சியினா் 64 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் குமரவேல் தலைமையில் வந்த அக்கட்சியினா், கோரிக்கைகளை வலியுறுத்தி,ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுச்சத்திரம் அருகே உள்ள சேவகவுண்டம்பாளையத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பகுதியைச் சேதப்படுத்தியவா்கள்மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. நாமக்கல் கொசவம்பட்டியில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, தா்னாவில் ஈடுபட்ட 64 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.