/

தமிழ்ப் புலிகள் கட்சியினா் தா்னா 64 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு

News image
நாமக்கல்லில் ஆட்சியரகம் முன் தா்னாவில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா்.
Updated On :2 மார்ச் 2026, 10:26 pm

Syndication

நாமக்கல்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டு தமிழ்ப் புலிகள் கட்சியினா் 64 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளிப்பதற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளா் குமரவேல் தலைமையில் வந்த அக்கட்சியினா், கோரிக்கைகளை வலியுறுத்தி,ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் முன் தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுச்சத்திரம் அருகே உள்ள சேவகவுண்டம்பாளையத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பகுதியைச் சேதப்படுத்தியவா்கள்மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. நாமக்கல் கொசவம்பட்டியில் மத மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, தா்னாவில் ஈடுபட்ட 64 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.