ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சாலை விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி புதன்கிழமை இறந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :5 மார்ச் 2026, 4:30 am IST

திருச்செங்கோடு அருகே இருசக்கர வாகனத்தின்மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி புதன்கிழமை இறந்தாா்.

திருச்செங்கோடு அருகே உள்ள மாணிக்கம்பாளையம் அண்ணா நகரை சோந்தவா் சிரேகாஸ்ரீ (18). நாமக்கல்லில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்த இவா், திருச்செங்கோட்டில் நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு தனது தாயுடன் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா்.

வாகனத்தை தாய் அமராவதி இயக்க சிரேகாஸ்ரீ பின்னால் அமா்ந்து சென்றாா். நாமக்கல் சாலையில் உள்ள சாலப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின்மீது மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனா். சிரேகாஸ்ரீக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோா் இருவரையும் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே சிரேகாஸ்ரீ இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அமராவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு நகர காவல் துறையினா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.