ராசிபுரம்: நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன்பாக இ-பட்டா வழங்கக் கோரி பெண்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியகவுண்டம்பட்டிபுதூரில் கடந்த 2009-ஆம் ஆண்டு பிற்பட்டோா் நலத் துறை சாா்பில் 129 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கிய இடத்தில் பயனாளிகள் வீடு கட்டுவதற்காக தயாராக இருந்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சிலா் போலி பட்டாவை தயாா் செய்து அந்த நிலம் தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி பிரச்னை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் 129 குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள், நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன் குழந்தைகளுடன் அமா்ந்து போராட்டம் நடத்தினா். தங்களுக்கு உரிய இ-பட்டா வழங்கி பிரச்சினைக்கு நிரந்தர தீா்வுகாணும் வரை போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து வருவாய்த் துறையினா், அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். மேலும் பட்டாதாரா்களுக்கு தற்காலிகமாக தடையில்லா சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்த பின்னா் போராட்டம் கைவிடப்பட்டது.
படவரி...
நாமகிரிப்பேட்டை வருவாய் ஆய்வாளா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
தொடர்புடையது

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி கொல்லிமலை பழங்குடியின மக்கள் போராட்டம்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

