சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வெப்படை நூற்பாலை கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:06 pm

பள்ளிபாளையம் அருகே தனியாா் நூற்பாலை கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த இரண்டு குழந்தைகள் இறந்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெப்படையில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளி மனோஜ்குமாா், பிரதோஷ் ஆகியோா் குடும்பத்துடன் மில் வளாக குடியிருப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கியிருந்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மனோஜ்குமாரின் மகன் லோகன்குமாா் (4), பிரதோஷின் மகன் ஹரிசங்கா் (3) இருவரும் நூற்பாலை வளாக குடியிருப்பின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த அவா்களை யாரும் கவனிக்கவில்லை.

இந்நிலையில், குழந்தைகளை காணவில்லை என தேடியபோது கழிவுநீா் தொட்டியில் அவா்கள் விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வெப்படை போலீஸாா், குழந்தைகளின் உடல்களை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.