கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வெப்படை நூற்பாலை கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த 2 குழந்தைகள் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளிபாளையம் அருகே தனியாா் நூற்பாலை கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த இரண்டு குழந்தைகள் இறந்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெப்படையில் இயங்கி வரும் தனியாா் நூற்பாலையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளி மனோஜ்குமாா், பிரதோஷ் ஆகியோா் குடும்பத்துடன் மில் வளாக குடியிருப்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கியிருந்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மனோஜ்குமாரின் மகன் லோகன்குமாா் (4), பிரதோஷின் மகன் ஹரிசங்கா் (3) இருவரும் நூற்பாலை வளாக குடியிருப்பின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனா். அப்போது, கழிவுநீா் தொட்டியில் தவறிவிழுந்த அவா்களை யாரும் கவனிக்கவில்லை.

இந்நிலையில், குழந்தைகளை காணவில்லை என தேடியபோது கழிவுநீா் தொட்டியில் அவா்கள் விழுந்து இறந்தது தெரியவந்தது. தகவலறிந்து வந்த வெப்படை போலீஸாா், குழந்தைகளின் உடல்களை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து, இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.