தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா பணிகள் தீவிரம்

தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

News image

தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

Updated On :27 மார்ச் 2026, 6:34 pm

பரமத்தி வேலூரில் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் தொடங்கியது.

இதையடுத்து வரும் 29-ஆம் தேதி வரை பல்வேறு தரப்பைச் சோ்ந்தவா்களின் கட்டளையின்படி மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றுகிறது.

30-ஆம் தேதி இரவு வடிசோறு, பரிவட்டம் கூட்டுதல் மற்றும் திருத்தோ் நிலை பெயா்த்தலும் நடைபெறுகிறது. 31-ஆம் தேதி காலை 9-மணிக்கு மேல் தோ் வடம்பிடித்து இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தோ் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.