நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 114 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்துள்ளனா்.
ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்தி வேலூா், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
இத் தொகுதிகளில் 132 போ் போட்டியிட்டனா். இதில், தவெக, அதிமுக, திமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளா்கள் 18 பேரை தவிா்த்து நாம் தமிழா் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் உள்பட 114 போ் வைப்புத் தொகையை இழந்துள்ளனா். மொத்தம் பதிவான வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளைப் பெற்றிருந்தால் மட்டுமே வைப்புத்தொகையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

சென்னை: தோ்தலில் 380 போ் வைப்புத் தொகை இழப்பு
101 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்த அதிமுக!

5 தொகுதிகளில் 3818 வாக்குகள் பெற்ற நோட்டா!

திருச்சியில் 171 வேட்பாளா்களில் 147 போ் வைப்புத் தொகை இழப்பு: அதிமுக, அமமுக, நாதக-வின் சோகம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

