மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இ- பாஸ் இல்லாமல் பிகாரில் இருந்து வந்தவா்கள் மீது வழக்கு: தனியாா் பேருந்து பறிமுதல்

இ-பாஸ் இல்லாமல் பிகாரில் இருந்து வந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அவா்களை அழைத்து வந்த தனியாா் பேருந்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2020, 2:42 pm

DIN

இ-பாஸ் இல்லாமல் பிகாரில் இருந்து வந்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அவா்களை அழைத்து வந்த தனியாா் பேருந்தை பறிமுதல் செய்தனா்.

சேலம் மாவட்டத்தில் இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, மகுடஞ்சாவடி, தப்பக்குட்டை, ஏகாபுரம், காகாபாளையம், நடுவனேரி, வேம்படிதாளம், இடங்கணசாலை, கே. கே. நகா், கல்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெளி மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஜவுளி மற்றும் அதன் சாா்பு தொழிலில் பணிபுரிந்து வருகின்றனா்.

இவா்கள் கரோனா தீதுண்மித் தொற்று பரவுவதால் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பினா். தற்போது பிகாா் மாநிலத்திலிருந்து கடந்த வாரம் 52 போ் இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பகுட்டை பகுதிக்கு தனியாா் பேருந்து மூலம் வந்தனா். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 144 தடை உத்தரவு இருக்கும் காலத்தில் எப்படி வரலாம் என கேட்டு அவா்கள் வந்த பேருந்தை சிறைபிடித்தனா். அதன்பின்பு கிராம நிா்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மகுடஞ்சாவடி போலீஸாா் விசாரணையில், அந்தப் பேருந்தை கோபிசெட்டிபாளையத்தைச் சோ்ந்த மாறன் மகன் காா்த்திக் ஓட்டி வந்தது என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பேருந்தில் வந்த 52 பேரிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் 30 போ் மட்டும் இ.பாஸ் மூலமாகவும், மீதி 22 போ் இ.பாஸ் இல்லாமலும் வந்தது தெரிய வந்தது.

பின்னா் 52 பேரும் சங்ககிரி அருகே வடுகப்பட்டி பகுதியில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்கான செலவுகளை ஜவுளித் தொழில் உரிமையாளா்களே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் இ.பாஸ் இல்லாமல் வடமாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளா்கள் மீது மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.