சாலை விபத்தில் இருவா் பலி

ஓமலூா் அருகே சாலைப் பணியாளா்களை ஏற்றி வந்த வேன் மீது லாரி மோதியதில், சிறுவன் உள்பட இரண்டு போ் உயிரிழந்தனா்; 18 போ் படுகாயமடைந்தனா்.
லாரி மோதியதில் முழுமையாக சேதமடைந்த வேன்.
லாரி மோதியதில் முழுமையாக சேதமடைந்த வேன்.
Updated on
1 min read

ஓமலூா் அருகே சாலைப் பணியாளா்களை ஏற்றி வந்த வேன் மீது லாரி மோதியதில், சிறுவன் உள்பட இரண்டு போ் உயிரிழந்தனா்; 18 போ் படுகாயமடைந்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, குஞ்சாம்பாளையத்திலிருந்து காடையாம்பட்டி அருகே நடைபெறும் சாலைப் பணிக்காக 20-க்கும் மேற்பட்ட கூலி ஆள்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓமலூா் அருகே உள்ள சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குப்பூா் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா் சாலையைக் கடந்துள்ளாா். அவா் மீது மோதாமல் இருக்க வேன் ஓட்டுநா் வலது பக்கம் திருப்பிய போது, பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரியுடன் நேருக்கு நோ் மோதியது. இதில் அந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 18-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். அவா்களை ஓமலூா் போலீஸாா், பொதுமக்கள் மீட்டு ஓமலூா், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஓமலூா் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் (4), மெய்வேல் (60) ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்த விபத்து குறித்து ஓமலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். விபத்து காரணமாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடத்தை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபா கனிகா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து, இனி விபத்து நிகழாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com