இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தம்மம்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம்

தம்மம்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம், சனிக்கிழமை  நடைபெற்றது.

News image
தம்மம்பட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக்கூட்டம்.
Updated On :26 டிசம்பர் 2020, 12:35 pm

DIN

தம்மம்பட்டியில் திமுக சார்பில் மக்கள் கிராம சபைக்கூட்டம், சனிக்கிழமை  நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் முதன்முதலாக மக்கள் கிராமசபைக்கூட்டம், 3வது வார்டு பகுதியில் நடைபெற்றது. இதற்கு நகர திமுக பொறுப்பாளர் ராஜா தலைமை வகித்தார். 3ஆவது வார்டு செயலாளர் சலீம் முன்னிலை வகித்தார். 

இதில் பொதுமக்கள் அப்பகுதியில் நீண்டகாலமாக தேவைப்படும் குடிநீர், மின்சாரம், அடிப்படைத்தேவைகள் குறித்து கோரிக்கைவிடுத்து பேசினர். மக்கள் தெரிவித்த கோரிக்கைகள் வரும் திமுக ஆட்சிக்காலத்தில் கட்டாயம் செய்யப்படும் என்று கட்சியினர் சார்பில் உறுதியளிக்கப்பட்டது. 

மக்கள் கிராம சபைக்கூட்டத்தில் நகர திமுக அவைத்தலைவர் சின்னுசாமி, துணைச் செயலாளர்கள் கலியன், பழனிமுத்து, முன்னாள் கவுன்சிலர் சேட்டு, சாகுல்அமீது, தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் வரதராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.