விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

சேலம் மாவட்டம், வாழப்பாடிஅருகே சேசன்சாவடியில், இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:32 pm

DIN

சேலம் மாவட்டம், வாழப்பாடிஅருகே சேசன்சாவடியில், இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி ஒன்றியம், காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, சேசன்சாவடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் சிவராஜ் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் நித்யா வரவேற்றாா். பெற்றோா் -ஆசிரியா் கழகத்தலைவா் ஜெயவேல் கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா்.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் திலகவதி, ஆசிரிய பயிற்றுநா் ஹரிகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவி பிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், இல்லம் தேடிக் கல்வியின் நோக்கம், செயல்பாடுகள், கல்வியின் முக்கியத்துவம் குறித்து, கிராமியக் கலைஞா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவியா் மற்றும் பெற்றோா், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.