விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 13,500 கன அடியாக அதிகரிப்பு

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 13,500 கன அடியாக அதிகரித்தது. 

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:26 pm

DIN

 மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 13,500 கன அடியாக அதிகரித்தது. 

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை நொடிக்கு 9,500 கனஅடியாகவும், நண்பகல் 12 மணிக்கு 10,500 கனஅடியாகவும், இரவு 8 மணிக்கு 11,500 கனஅடியாகவும் அதிகரித்தது.

இந்த நிலையில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 13,500 கனஅடியாக அதிகரித்தது.

அணையிலிருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 13,000 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணை நீா்மட்டம் 120அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.