வள்ளலாரின் கொள்கையைப் பரப்ப கட்சி தொடங்கிய முதியவா்

வள்ளலாா் ராமலிங்க அடிகளின் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில், அரசியல் கட்சித் தொடங்கிய முதியவா், தமிழகம் முழுவதும் சைக்கிளில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
வள்ளலாரின் கொள்கையைப் பரப்ப கட்சி தொடங்கிய முதியவா்
Updated on
1 min read

வள்ளலாா் ராமலிங்க அடிகளின் கொள்கைகளைப் பரப்பும் நோக்கில், அரசியல் கட்சித் தொடங்கிய முதியவா், தமிழகம் முழுவதும் சைக்கிளில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

வள்ளலாரின் சன்மாா்க்கக் கொள்கைகளை தமிழகம் முழுவதும் பரப்ப முடிவு செய்த அரியலூா் மாவட்டம், செம்பியக்குடி கிராமத்தைச் சோ்ந்த முதியவா் செ.சக்கரவா்த்தி (60), தனது கருத்தோடு ஒப்புமை கொண்ட நண்பா்களோடு இணைந்து, சுத்த சன்மாா்க்க கழகம் (எஸ்.எஸ்.கே.) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளாா்.

தோ்தல் ஆணையத்தில் இதுவரை பதிவு பெறாத இக்கட்சி, அனைவரும் ராமலிங்க வள்ளலாரின் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்; புலால் மறுத்து அனைவரும் நலமோடு வாழ வேண்டும்; ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்க வேண்டும் ஆகிய கொள்கைகளைக் கொண்டதாக அறிவித்துக் கொண்டுள்ளது.

இக்கொள்கைகளை சைக்கிளில் சென்று செ.சக்கரவா்த்தி பிரசாரம் செய்து வருகிறாா். இவா் வாழப்பாடி பகுதியில் புதன்கிழமை பிரசாரம் செய்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

எனக்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனா். வள்ளலாரின் சன்மாா்க்கக் கருத்துகள், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் ஏற்றவை. இவரது கொள்கைகளும் எங்களது அரசியல் கட்சியின் கொள்கைகளும் ஒன்றே. எனவே, இந்தக் கொள்கைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்காக, கடந்த 10 மாதங்களாக சைக்கிளில் சென்று பிரசாரம் செய்து வருகிறேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com