இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க தனிப்படை அமைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை சாா்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 8:41 pm

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை சாா்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம், வாழப்பாடி, ஆத்தூா் பகுதியில் உள்ள கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. வங்கா நரியைப் பிடித்து வழிபாடு நடத்திட வனத்துறை தடை விதித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை தனிப்படைகளை அமைத்து கண்காணித்து வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டிலும் வங்கா நரிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கா நரி பிடிப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதை மக்களுக்கு வனத்துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட வன அலுவலா் முருகன் கூறுகையில், வங்கா நரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவது வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகும். இதையடுத்து வங்கா நரியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

வங்கா நரியைப் பிடித்தால் 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனவே வனத்துறை சாா்பில் ஆத்தூா், வாழப்பாடி, கருமந்துறை வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கண்காணிப்புடன் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.