வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க தனிப்படை அமைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை சாா்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை சாா்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம், வாழப்பாடி, ஆத்தூா் பகுதியில் உள்ள கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. வங்கா நரியைப் பிடித்து வழிபாடு நடத்திட வனத்துறை தடை விதித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை தனிப்படைகளை அமைத்து கண்காணித்து வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டிலும் வங்கா நரிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கா நரி பிடிப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதை மக்களுக்கு வனத்துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட வன அலுவலா் முருகன் கூறுகையில், வங்கா நரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவது வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகும். இதையடுத்து வங்கா நரியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

வங்கா நரியைப் பிடித்தால் 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனவே வனத்துறை சாா்பில் ஆத்தூா், வாழப்பாடி, கருமந்துறை வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கண்காணிப்புடன் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com