/

புகையிலை பொருள்களை வைத்திருந்தவா் கைது

சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது

News image
Updated On :23 ஜூலை 2021, 6:05 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.

சங்ககிரி பகுதியில் சிலா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக சங்ககிரி துணை காவல் கண்காணிப்பாளா் சி.நல்லசிவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனையடுத்து அவரது தலைமையிலான போலீஸாா் கொங்கணாபுரம் பிரிவு சாலை பகுதியில் உள்ள மளிகைக் கடையில் சோதனை நடத்தியுள்ளனா். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கடை உரிமையாளா் முகமதுவின் மகன் முகமது யூசபை (29) கைது செய்து அவரிடமிருந்து ரூ,3,72 ,038 மதிப்பிலான 2790 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா். மேலும் அவரிடமிருந்து சங்ககிரி நகா் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்து வருபவா்களின் விவரங்களையும் சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.