

எடப்பாடி: முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாள் விழா எடப்பாடியில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.எஸ் செல்வகணபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திமுக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளு டன் இனிப்பு மற்றும் உணவுப் பொட்டலங்களை வழங்கினார்.
இதையும் படிக்க: ஆரூர் தாஸ், சண்முகநாதனுக்கு விருது: முதல்வர் வழங்கினார்!
முன்னதாக கலைஞரின் பிறந்தநாள் விழாவினையொட்டி நடைபெற்ற இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்த டி.எம்.எஸ்.செல்வகணபதி, திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், நகர செயலாளர் டி.எம்.எஸ் பாஷா, மாநில செயற்குழு உறுப்பினர் பி.ஏ.முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் நல்லதம்பி, பரமசிவம் உள்ளிட்ட திரளான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.