/

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வினாடிக்கு 5,531 கன அடியிலிருந்து 6,318 கன அடியாக அதிகரித்து உள்ளது.

News image
Updated On :8 மே 2022, 5:27 am

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வினாடிக்கு 5,531 கன அடியிலிருந்து 6,318 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையின் நீர்மட்டம் 106.38 அடியிலிருந்து 106.66 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 73.74 டிஎம்சியாக  உள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ம மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6, 318 கன அடியாக அதிகரித்துள்ளது. குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு  நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.