சேலத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், சூரமங்கலம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் பாபு ஆனந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சித்தையன் முன்னிலை வகித்தாா். ஏற்காடு வட்டத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றுப் பேசினாா்.
இதில் கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ. 15,700 வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளா்களுக்கு சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி கிராம உதவியாளா்களுக்கு தொடா்ந்து மாற்றுத் திறனாளி ஊா்திப்படி வழங்க வேண்டும். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற கிராம உதவியாளா்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து நிலஅளவையாளா் மற்றும் ட்ராப்ட்ஸ்மேன் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சூரமங்கலம் கேட்டாட்சியா் அலுவலகம் முன்பு முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.