இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மேட்டூர் அணையில் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிப்பு!

.90 வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை காலை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பப்பட்டுள்ளனர்.

News image
Updated On :11 ஜூன் 2023, 9:13 am

DIN

.90 வது ஆண்டாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நாளை காலை தண்ணீர் திறக்கப்படவுள்ள நிலையில் அங்கு நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்டா பாசனத்திற்காக மேட்டூரில் நாளை (ஜூன் 12) தண்ணீர் திறந்து விடுகிறார்.

துவக்கத்தில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்,நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு.  அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்திப்சக்சேனா,நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையா, நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

அணையின் வலது கரையில் மேடை அமைக்கும் பணியும் மேல்மட்ட மழையின் அருகே மின்விசை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இந்தப் பணிகளை திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆய்வு செய்தார். வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும், மேட்டூர் அணையில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அணையின் வலது கரை போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.