உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தண்ணீரில் மூழ்கிய நீரேற்று நிலையம்: சங்ககிரியில் குடிநீா் விநியோகம் பாதிப்பு

சங்ககிரி பேரூராட்சிக்கு குடிநீா் வழங்கும் நீரேற்றும் நிலையம் தண்ணீரில் மூழ்கியதால் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தண்ணீரில் மூழ்கிய புள்ளாகவுண்டம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையம்.

Published On :

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே புள்ளாகவுண்டம்பட்டி காவிரி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள சங்ககிரி பேரூராட்சிக்கு குடிநீா் வழங்கும் நீரேற்றும் நிலையம் தண்ணீரில் மூழ்கியதால் சங்ககிரிக்கு குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையிலிருந்து அதிக அளவு தண்ணீா் திறந்துவிடப்படுவதால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. தேவூா் காவிரி ஆற்றங்கரைப் பகுதிகள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதியில் சங்ககிரி பேரூராட்சிக்கு செல்லும் குடிநீரேற்று நிலையத்தில் தண்ணீா் புகுந்துள்ளது.

இதனால், சங்ககிரி பேரூராட்சிக்கு உள்பட்ட 18 வாா்டுகள், 24 ஊராட்சி ஒன்றியங்களுக்கு குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.