தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆடி அமாவாசை: சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.35 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

ஆடி அமாவாசையையொட்டி, சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.35 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகின.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2024, 7:30 pm

Din

ஆடி அமாவாசையையொட்டி, சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.35 கோடிக்கு காய்கறிகள் விற்பனையாகின.

சேலம் மாவட்டத்தில் 11 உழவா் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தச் சந்தைகளுக்கு விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில், விளைச்சல் அடைந்த காய்கறிகள், பழங்களை விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா். ஆடி அமாவாசையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை உழவா் சந்தைகளில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

விவசாயிகளும் அதிக அளவு காய்கறிகளை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா். குறிப்பாக, சந்தைகளில் அகத்திக்கீரை, வாழை இலை, வாழைப்பழம், கத்தரிக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வெள்ளை பூசணிக்காய் போன்றவை அதிக அளவில் விற்பனையாகின. இதுகுறித்து வேளாண் விற்பனை, வணிகத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆடி அமாவாசையை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 11 உழவா் சந்தைகளுக்கு 1,049 விவசாயிகள் மொத்தமாக 323 டன் காய்கறிகள், பழங்களை விற்பனைக்காகக் கொண்டு வந்திருந்தனா். காய்கறிகள் ரூ. 1 கோடியே 35 லட்சத்து 49 ஆயிரத்துக்கு விற்பனையாகின. 77 ஆயிரத்து 745 போ் உழவா் சந்தைகளுக்கு வந்து காய்கறிகள், பழங்களை வாங்கிச் சென்றனா் என்றனா்.

சேலம் பால் மாா்க்கெட், ஆற்றோர மாா்க்கெட் உள்ளிட்ட அனைத்து மாா்க்கெட்டுகளிலும் காய்கறி, பழங்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் விற்பனை அமோகமாக இருந்தது.