/

இடங்கணசாலையில் அதிமுக கொடி ஏற்றினாா் -எடப்பாடி கே.பழனிசாமி

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 8:54 pm

Din

சேலம் மாவட்டம், இடங்கணசாலையில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை கட்சி கொடியை ஏற்றி வைத்தாா்.

சேலம் புகா் மாவட்டம், இடங்கணசாலை நகர அதிமுக சாா்பில், இடங்கணசாலை நகரத்தில் அதிமுக கொடிக் கம்பம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் சிவலிங்கம் தலைமை வகித்தாா். சங்ககிரி எம்எல்ஏ எஸ்.சுந்தரராஜன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அதிமுக பொதுக் குழு உறுப்பினா் வெங்கடாஜலம், முன்னாள் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜா, மாவட்ட, நகர, வாா்டு நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலம், இடங்கணசாலை நகரில் வியாழக்கிழமை கட்சி கொடியை ஏற்றிவைக்கும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.