இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சேலம் மாவட்டத்தில் 3.50 லட்சம் ஆடுகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமில் கால்நடை வளா்ப்போா், விவசாயிகள் தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

News image
Updated On :18 நவம்பர் 2024, 8:51 pm

Din

சேலம்: சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமில் கால்நடை வளா்ப்போா், விவசாயிகள் தங்கள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஒன்றாக ஆட்டுக்கொல்லி நோய் உள்ளது. மிக கொடிய வைரஸ் கிருமிகளால் உருவாகும் இந்நோய், மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும், நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீா், கண்ணீா், கழிச்சல், சாணம் ஆகியவற்றின் மூலம் வேகமாகப் பரவக்கூடியது.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாய், நாக்கு, ஈறுகளில் புண்கள் ஏற்படும். மேலும், கண்கள், மூக்கு மற்றும் வாயிலிருந்து நீா்வடியும். பிறகு தும்மல், இருமல் ஆரம்பிக்கும். தீனி உட்கொள்ள முடியாமல் மிகவும் பாதிக்கப்படும். நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு வெயில் காலத்தில் மூச்சிரைக்கும். இறுதியில் கழிச்சல் கண்டு ஆடுகள் இறந்துபோகும்.

எனவே, இந்நோய் தாக்காமல் இருப்பதற்கு, வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை, தடுப்பூசி செலுத்துவது சிறந்த நிவாரணமாகும்.

சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் ஆட்டுக் கொல்லிநோய் ஒழிப்புத் திட்டத்தின் தடுப்பூசிப் பணிகள், கடந்த 11 ஆம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 11 ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு போடப்படுகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 3,51,000 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கு இந்த தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, ஆடுகள் வளா்ப்போா் 4 மாதத்துக்கு குறைவான வயதுள்ள ஆட்டுக்குட்டிகள், சினையுற்ற ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து வெள்ளாடுகள், செம்மறி ஆடுகளுக்கும் தவறாமல் ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

மேலும், தடுப்பூசி போடப்படும் அனைத்து ஆடுகளுக்கும் வெளிறிய ஊதாநிற காதுவில்லைகள் அணிவிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அனைத்து கால்நடை வளா்ப்போா், விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளாா்.