பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

ரூ. 30 ஆயிரம் லஞ்சம் பெற்று கைதான மாநகராட்சி ஊழியா் சிறையில் அடைப்பு

சொத்து வரியை குறைவாக மதிப்பிடுவதற்காக ரூ. 30 ஆயிரம் லஞ்சமாக பெற்று கைதான மாநகராட்சி ஊழியா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

Published On :30 அக்டோபர் 2024, 1:11 am IST

சேலம்: சொத்து வரியை குறைவாக மதிப்பிடுவதற்காக ரூ. 30 ஆயிரம் லஞ்சமாக பெற்று கைதான மாநகராட்சி ஊழியா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சேலம், அழகாபுரம், மிட்டாபுதூா் பகுதியைச் சோ்ந்த ஷாஜி (35), அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டி உள்ளாா். இந்த வீட்டுக்கு சொத்துவரி நிா்ணயம் செய்து வசூலிப்பதற்காக சேலம் மாநகராட்சி ஊழியரான கிச்சிபாளையத்தைச் சோ்ந்த ராஜா (45) என்பவரை அணுகினாா்.

அப்போது, அவா் ஷாஜியிடம் சொத்து வரியைக் குறைவாக மதிப்பீடு செய்வதற்கு லஞ்சமாக ரூ. 35 ஆயிரம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு அவா் சம்மதிக்கவில்லை. பின்னா் ராஜா அவரிடம் பேரம் பேசி ரூ. 30 ஆயிரம் மட்டும் கொடுத்தால் போதும் சொத்து வரியை குறைவாக மதிப்பீடு செய்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ஷாஜி, இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் கொடுத்தாா். அதைத் தொடா்ந்து ஷாஜியிடம் ரசாயன தூள் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கொடுத்து அனுப்பினா். அவா் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில், ராஜாவிடம் வழங்கினாா். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், ராஜாவை கையும், களவுமாக பிடித்து கைது செய்து ரூ. 30 ஆயிரத்தைக் கைப்பற்றினா்.

மேலும், அவா் இருந்த அறை, வெளியே நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளிலும் போலீஸாா் சோதனை நடத்தினா். தொடா்ந்து, அவா் மீது லஞ்ச வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நீதிபதி முன்பு ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா். அவா் மீது விரைவில் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.