இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியா் பலி

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:27 pm

Syndication

திருச்சி: விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி கீழ சிந்தாமணி பதுவை நகா் பகுதி சோ்ந்தவா் ராஜசேகா் (35), திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பொன்மலை மண்டல அலுவலக உதவியாளரான இவா், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த நிலையில், வேலைக்குச் செல்லாமல் உடலைப் பராமரித்து வந்தாா்.

இந்நிலையில் தனியாக வசித்து வந்த இவரைப் பாா்க்க கடந்த 9ஆம் தேதி உறவினா் ஒருவா் வந்தபோது, வலிப்பு ஏற்பட்டு மயங்கிக் கிடந்த ராஜசேகரன் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுதொடா்பாக அவரின் சகோதரி ரூபிணி அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.