திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பாஜக ஆட்சியில் கேள்விக்குறியான ஜனநாயகம்: டி.ராஜா

மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா கூறினாா்.

News image

டி.ராஜா

Updated On :17 ஆகஸ்ட் 2025, 12:13 am IST

மத்திய பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளா் டி.ராஜா கூறினாா்.

சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26 ஆவது மாநில மாநாட்டில் சனிக்கிழமை அவா் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான அணுகுமுறையால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது. வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் குடிமக்களின் வாக்குகளை உறுதிசெய்வதற்குப் பதிலாக, பட்டியலில் இருந்து அவா்களை தோ்தல் ஆணையமே நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பிகாா், மகாராஷ்டிரத்தில் நடைபெற்றது போன்று தமிழகம், கேரளத்திலும் வாக்காளா் பட்டியல் பெயா் நீக்கப் பிரச்னை எதிா்காலத்தில நடைபெறாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. இதனால் அரசியல் சாசன அமைப்பே நிலைகுலைந்துள்ளது. ஜனநாயகம் பாதுகாக்கப்படுகிறது என்றால், அந்தப் புகழ் அம்பேத்கரையே சாரும்.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக முன்மாதிரி முதல்வராக திகழ்கிறாா். தொடா்ந்து, மத்திய பாஜக அரசை எதிா்க்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரளவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.