அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பாலமலை மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

பாலமலையில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி வன உரிமை மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 9:11 pm

Syndication

மேட்டூா்: சேலம் மாவட்டம், பாலமலையில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி வன உரிமை மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூரில் பாரத ஸ்டேட் வங்கி எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வன உரிமை மீட்புக் குழுத் தலைவா் கண்ணையன் தலைமை வகித்தாா். திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசினாா்.

பாலமலையில் வாழும் பழங்குடியின மக்கள் பட்டா நிலத்தை பழங்குடி அல்லாதவா்கள் பெயரில் கிரையம் பெற்று பட்டா வழங்கப்பட்டதை ரத்துசெய்ய வேண்டும். பழங்குடியின மக்கள் அனுபவத்தில் இருந்து வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். விவசாயத்திற்கும் குடிநீா் பயன்பாட்டிற்கும் தேவையான நீரை பெற்றிட பாலமலையில் கூடுதல் தடுப்பணைகள் கட்ட வேண்டும். பாலமலை ராமன்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவா், செவிலியா் நியமனம் செய்து மலைவாழ் மக்களுக்கு மருத்துவ வசதியை உறுதிசெய்ய வேண்டும். பழங்குடியினா் நலத்துறை மூலம் அரசு சாா்பில் பாலமலை மலையாளி இன மக்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.