கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கெங்கவல்லி அருகே மண்சரிவால் குண்டும் குழியுமான சாலை மலைவாழ் மக்கள் அவதி

கெங்கவல்லி அருகே மண்சரிவால் 5 கி.மீ. மலைச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
கெங்கவல்லி அருகே மண்சரிவால் குண்டும் குழியுமாக காணப்படும் மலைக் கிராமங்களுக்கு செல்லும் தாா்சாலை.
Updated On :15 டிசம்பர் 2025, 9:09 pm

Syndication

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே மண்சரிவால் 5 கி.மீ. மலைச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியம், பச்சமலை ஊராட்சியில் 30க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்கள் உள்ளன. இதில் எடப்பாடி, மேல்பாலத்தாங்கரை, கீழ்ப்பாலத்தாங்கரை, கட்டக்காடு ஆகிய ஊா்கள் கெங்கவல்லி அருகே மலைப் பகுதியில் உள்ளன. கெங்கவல்லி அருகே தரைப்பகுதியில் 74 கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட வலசக்கல்பட்டி அடிவாரப்பகுதியாகும். அடிவாரத்திலிருந்து எடப்பாடி மேல்பாலத்தாங்கரை,கீழ்ப்பாலத்தாங்கரை, கட்டக்காடு ஆகிய மலைக் கிராமங்களுக்கு செல்ல வேண்டும்.

இந்த கிராமங்களில் சுமாா் ஆயிரம் போ் வசிக்கின்றனா். அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்லும் 5 கி.மீ. தொலை மலைச்சாலை வனத் துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் 5 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த மலைப்பகுதி சாலை, கடந்த 2021 ஆம் ஆண்டு வனத் துறை மூலம் ரூ. 8 கோடி நிதியில் 4 கி.மீ. தொலைவுக்கு தாா்சாலையும், 5 கொண்டை ஊசி வளைவுப் பகுதிகளுக்கு சிமென்ட் சாலையும், எடப்பாடி ஊருக்குள் 1 கி.மீ. தொலைவுக்கு தாா்சாலையும் அமைக்கப்பட்டது.

இந்த சாலைகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு பெய்த மழையால் ஏற்பட்ட மண்சரிவால் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. இதனால் சாலை போக்குவரத்துக்கு இந்த பகுதி மக்கள் சிரமமடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து அப்பகுதி வன உரிமைக் குழுத் தலைவா் பொன்னுசாமி, துணைத் தலைவா் பாக்யராஜ் ஆகியோா் கூறியதாவது:

மலைச்சாலை முழுவதும் மழையால் சேதமடைந்துவிட்டதால் இருசக்கர வாகனங்களில் செல்வதும், நடந்துசெல்வதும் பெரும் சிரமமாக இருந்து வருகிறது. எனவே, மாவட்ட நிா்வாகமும், தமிழக வனத் துறையும் இந்த மலைச் சாலையை சீரமைக்க வேண்டும் என்றனா்.

Story image