மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேலம் மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

சேலம் மத்திய சிறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :20 டிசம்பர் 2025, 6:44 pm

Syndication

சேலம் மத்திய சிறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கைதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தத்தை சோ்ந்தவா் கண்ணையன் (66). இவரை குடியாத்தம் போலீஸாா் கஞ்சா வழக்கில் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை கண்ணையனுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, சிறைத் துறை அதிகாரிகள் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சனிக்கிழமை அதிகாலை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.