இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தல்

மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 4:18 pm

Syndication

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என அண்ணா தொழிற்சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநா்கள் பிரிவு 25-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அண்ணா தொழிற்சங்க மாநகா் மாவட்டச் செயலாளா் சுந்தரபாண்டியன், மாவட்டத் தலைவா் கதிா்வேல் ஆகியோா் தலைமை வகித்தனா். அதிமுக மாநகா் மாவட்டச் செயலாளா் ஏ.கே.எஸ்.எம்.பாலு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

இந்தக் கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆட்டோ கட்டணங்களை குறைந்தபட்சம் ரூ. 50-ஆக நிா்ணயிக்க வேண்டும். தனியாா் செயலி மூலம் இயக்கப்படும் காா் உள்ளிட்ட வாகனங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 80-ஆக உயா்த்த வேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் தனியாா் செயலிகள் மூலம் இயங்கும் இருசக்கர டாக்ஸியை முற்றிலுமாக தடைசெய்ய வேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி பசுமை வீடு திட்டத்தின்கீழ் வீடுகட்டி தரவேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு தனி நலவாரியம் அமைத்து விபத்து மற்றும் இறப்புத் தொகை, ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் அண்ணா ஆட்டோ ஓட்டுநா் தொழிற்சங்கப் பிரிவு செயலாளா் அன்பு, பொருளாளா் இஸ்மாயில், துணைத் தலைவா்கள் அய்யம்பெருமாள், ஞானகுமாா், இணைச் செயலாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.