கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் அரசு வழங்கிய இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை அளந்து கொடுக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட 36 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலத்தை அடுத்த எருமனூா் கிராமத்தைச் சோ்ந்த 96 பயனாளிகளுக்கு கடந்த ஒன்றரைஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினாராம். அவ்வாறு வழங்கப்பட்ட மனைப்பட்டா இடத்தை காண்பிக்காமலும், அளவீடு செய்துகொடுக்காமலும் வருவாய்த் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனராம்.
இதுகுறித்து பயனாளிகள் பலமுறை மாவட்ட ஆட்சியா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரியிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட பயனாளிகள் விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், அவா்கள் விருத்தாசலம் - கடலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, விருத்தாசலம் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 36 பேரை கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.
தொடர்புடையது

வீட்டுமனைப் பட்டா கோரி விவசாயிகள் போராட்டம்

அபிஷேகப்பாக்கத்தில் சாலை மறியல்

ராசிபுரத்தில் 128 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


