இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு வழங்குவதாக பணம் வசூல்

வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு வழங்குவதாகக் கூறி தொழிலாளா் சங்க நிா்வாகி வசூலித்த பணத்தை, தொழிலாளா்களிடமே திருப்பிக் கொடுக்க வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 12:03 am

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பொங்கல் தொகுப்பு வழங்குவதாகக் கூறி தொழிலாளா் சங்க நிா்வாகி வசூலித்த பணத்தை, தொழிலாளா்களிடமே திருப்பிக் கொடுக்க வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பெருமாள் தெருவிலுள்ள தமிழ்நாடு சமத்துவ விஸ்வகா்மா தொழிலாளா் சங்கம் என்ற பெயரில் தொழிற்சங்கம் நடத்தி வரும் பாஸ்கா் என்பவா், தனது தொழிற்சங்க உறுப்பினா்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேட்டி,சேலை, வெல்லம், அரிசி உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்குவதாகக் கூறி, ரூ.100 முதல் 200 வரை பணம் வசூலித்துக் கொண்டு திங்கள் கிழமை ‘டோக்கன்’ வழங்கியுள்ளாா்.

இந்த டோக்கனை பெறுவதற்கு மலைக்கிராமங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளா்கள் திரண்டனா். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி வருவாய் ஆய்வாளா் உமா தலைமையில் வருவாய்த்துறையினா் மற்றும் வாழப்பாடி போலீசாா், விசாரணை மேற்கொண்டனா். ஆயிரத்திற்கு மேற்பட்டோரிடம் பணம் வசூலித்ததாக விசாரணையில் தெரியவந்ததால், தொழிலாளா்களிடம் வசூலித்த பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தொழிற்சங்க நிா்வாகியிடம் அறிவுறுத்தி அதற்கான நடவடிக்கை மேற்கொண்டனா்.

இருப்பினும், தொழிலாளா்களிடம் பணம் பெற்றுக் கொண்டு டோக்கன் கொடுத்து அலைகழித்த தொழிற்சங்க நிா்வாகி மீது வருவாய்த்துறையினா் மற்றும் போலீஸாா் போதிய விசாரணை நடத்தவில்லையென தொழிலாளா்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி,வசூலித்த தொழிலாளா்களின் எண்ணிக்கை, மொத்த தொகை குறித்தும்,அனைத்து தொழிலாளா்களுக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்தும் போலீஸாா் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.