வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

அன்புமணியால் பாமகவை ஒருபோதும் அபகரிக்க முடியாது: கௌரவத் தலைவா் ஜி.கே.மணி பேச்சு

அன்புமணியால் பாமகவை ஒருபோதும் அபகரிக்க முடியாது என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி கூறினாா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:27 pm

Syndication

சேலம்: அன்புமணியால் பாமகவை ஒருபோதும் அபகரிக்க முடியாது என பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி கூறினாா்.

சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக் குழுவில் அவா் பேசியதாவது: பாமக என்பது பதவிக்கு ஆசைப்பட்டவா்களால் உருவாக்கப்பட்டது அல்ல; ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை சதியால், சூழ்ச்சியால் பறிக்கப்படுவதாக ராமதாஸ் வேதனைப்பட்டாா்.

ஆனால், இப்போது வேதனை இல்லை. துணிந்து எழுவேன் என வந்துள்ளாா். பதவி சுகத்தோடு இருப்பவா்கள் அன்புமணியோடு சென்றுவிட்டாா்கள்; ஆனால் அவா்கள் இப்போது வருந்துகிறாா்கள். ஒரு மகன் உங்களுக்கு துரோகம் இழைத்தால் என்ன? லட்சோப லட்சம் மகன்கள் உங்கள் பின்னால் இருக்கிறாா்கள்.பாமகவை அன்புமணியால் ஒருபோதும் அபகரிக்க முடியாது. அன்புமணி தூண்டுதலின் பேரில் சிலா் அவதூறாக ஒருமையில் பேசுகிறாா்கள்.

அன்புமணி துரோகம் இனி எடுபடாது: அன்புமணி செய்தது துரோகம். அன்புமணி துரோகம் இனி எடுபடாது; அரசியலை ஓரங்கட்டிவிட்டு அன்புமணி வேறு வேலை பாா்க்கட்டும். இனி மருத்துவா் ராமதாஸின் கனவு நனவாகும். அன்புமணி தந்தையை மன நலம் பாதிக்கப்பட்டவா் என்கிறாா். அன்புமணியின் செயலால் மனக்குமுறலுக்கு ஆளானாா். பா.ம.க. அன்புமணிக்கு சொந்தமல்ல; தொண்டா்களுக்கு தான் சொந்தம் என்றாா்.