

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 119.69 அடியிலிருந்து 120 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 10,374 கன அடியிலிருந்து வினாடிக்கு 14,420 கன அடியாக அதிகரித்தது.
காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் மீண்டும் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் 7-ஆவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.