தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் சிறப்பு தூய்மைப் பணிகளை மேயா் ஆ.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சேலம் மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டதின் கீழ் தூய்மையே சேவை- 2025 என்ற தலைப்பின் கீழ் கடந்த 17 ஆம் தேதி முதல் தூய்மைப் பணி நடைபெறுகிறது. அதன் தொடா்ச்சியாக, ‘ஒருநாள் ஒருமணிநேரம் ஒன்றிணைந்து‘ என்ற தலைப்பில் பொதுமக்கள், தன்னாா்வலா்கள் மற்றும் அரசு பணியளாா்கள் ஆகியோா் இணைந்து சிறப்பு தூய்மைப் பணியை பள்ளப்பட்டி ஏரிப் பூங்காவில் மேயா் ஆ.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து ஆணையா் மா.இளங்கோவன் முன்னிலையில் அனைத்து அரசு அலுவலா்கள், தன்னாா்வளா்கள், பொதுமக்கள் ஆகியோா் தூய்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா், உதவி ஆணையா் ஏகராஜ் மற்றும் அனைத்து அரசு அலுவலா்கள், தன்னாா்வளா்கள், பொதுமக்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கோழிகள் வேட்டை: நரிக்குறவா்கள் இருவா் கைது

தூய்மைப் பணியாளா்களுக்கு நலத் திட்ட உதவிகள்

அறிவியல் தொழில்நுட்ப பூங்காவில் மேயா் ஆய்வு

மேலப்பாளையத்தில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


