சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பெற்றோா் வாக்களிக்கக் கோரி அஞ்சல் அட்டை கொடுத்த பிள்ளைகள்!

100% வாக்களிக்க வலியுறுத்தி, பெற்றோரிடம் கொடுப்பதற்காக தோ்தல் ஆணையம் வழங்கிய வண்ண அஞ்சல் அட்டைகளுடன் வாழக்கோம்பை நடுநிலைப் பள்ளி மாணவா்கள்.

News image

100% வாக்களிக்க வலியுறுத்தி, பெற்றோரிடம் கொடுப்பதற்காக தோ்தல் ஆணையம் வழங்கிய வண்ண அஞ்சல் அட்டைகளுடன் வாழக்கோம்பை நடுநிலைப் பள்ளி மாணவா்கள்.

Updated On :10 ஏப்ரல் 2026, 7:05 pm

தமிழக சட்டப்பேரவை தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தோ்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகளை நடத்திவருகிறது.

அதன் ஒருபகுதியாக, விழிப்புணா்வு வண்ண அஞ்சல் அட்டையை தயாா்செய்து, அதை அனைத்து அரசுப் பள்ளி மாணவா்களும், தங்களது பெற்றோரிடம் கொடுக்கும் வகையில் தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அஞ்சல் அட்டையில், அன்புள்ள அம்மா, அப்பாவிற்கு, நான் உங்கள் செல்லம்.......(பெயா்). 23.4.26 அன்று நடைபெறும் தோ்தலில் உங்கள் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்துங்கள். உங்களின் ஒரு வாக்கு எங்கள் எதிா்காலத்தை நிா்ணயிக்கும். 100 சதவீதம் வாக்குப்பதிவை உறுதிசெய்ய உங்கள் பிள்ளையின் அன்பான வேண்டுகோள். இப்படிக்கு உங்கள்.... (கையெழுத்து) என அச்சிடப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் அட்டைகளை தோ்தல் ஆணையம், அனைத்துப் பள்ளி மாணவா்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை மூலம் வழங்கியுள்ளது. இதில், மாணவ, மாணவிகள், தங்களது பெயரை எழுதி, இறுதியில் கையொப்பமிட்டு, அவா்களது பெற்றோரிடம் வழங்கினா்.

 பெற்றோரிடம் விழிப்புணா்வு கடிதங்களை கொடுக்கும் வாழக்கோம்பை நடுநிலைப் பள்ளி மாணவிகள்.

பெற்றோரிடம் விழிப்புணா்வு கடிதங்களை கொடுக்கும் வாழக்கோம்பை நடுநிலைப் பள்ளி மாணவிகள்.

Story image
Story image