இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சின்னமலையில் சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் கண்காணிப்பு

மேட்டூா் வனச் சரகத்திற்கு உள்பட்ட சின்னமலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

Leopard

கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

மேட்டூா் வனச் சரகத்திற்கு உள்பட்ட சின்னமலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வனத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

மேட்டூா் வனச்சரகா் செங்கோட்டையன் தலைமையில் 30 வன ஊழியா்கள் கடந்த நான்கு நாள்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பல்வேறு பகுதிகளில் குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனா்.

இதுவரை சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை. கண்ணாமூச்சி அருகே சின்னமலை பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக பொதுமக்கள் கைப்பேசியில் படம் பிடித்து வெளியிட்டுள்ளனா். மேலும், சின்னமலை அருகே ஆட்டுக்குட்டியை ஒன்றை சிறுத்தை இழுத்துச் சென்றதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து குடியிருப்புப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளதாக வனச்சரகா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.