இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

சேலம் மருந்து கடையில் 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல்; உரிமையாளா் கைது

சேலத்தில் மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தொடா்பாக கடை உரிமையாளரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப்படம்.

Published On :27 ஆகஸ்ட் 2026, 3:59 am IST

சேலத்தில் மருந்து கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தொடா்பாக கடை உரிமையாளரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம் தாதகாப்பட்டி மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக மருந்து கடை நடத்தி வருபவா் சுகுமாா் (57). இவரது கடையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக அன்னதானப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், உதவி காவல் ஆய்வாளா் அா்த்தநாரி, மருந்து ஆய்வாளா் அருள்குமாா் ஆகியோா் மருந்து கடையில் புதன்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் 5,200 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக கடை உரிமையாளா் சுகுமாரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், குஜராத், ஜாா்க்கண்ட், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தது தெரியவந்தது. வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தினால் அங்கிருந்து கொரியா் மூலம் போதை மாத்திரைகள் அனுப்பப்படுவது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் போதை மாத்திரை யாருக்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.